Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் பிரச்சினையில் 16 வயது சிறுமி தற்கொலை செய்தது தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணை பகுதியில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்முகாமைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் காதலித்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், காதலர்கள் இருவரும் விஷம் அருந்த முடிவு செய்த நிலையில் கடந்த 13-ம் தேதி சிறுமி விஷம் அருந்தினார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுமியை காதலித்த இளைஞர் தலைமறைவானர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்யமறுத்து, சிறுமியின் உறவினர்கள் பாப்பிரெட்டிப் பட்டியில் போராட்டத்தில் ஈடுபட் டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் பார்வதி தலைமை யிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT