Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே ஜூன் 18-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை நேற்று முன்தினம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக வேகத்தடுப்புகளை வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக இரும்பினால் ஆன வேகத்தடுப்பு வைக்கப்பட்டது. ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, டிஎஸ்பி மதன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT