Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

கரூர் கரூர் மாவட்டம் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 21) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன

கரூர்

கரூர் மாவட்டம் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 21) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பள்ளபட்டி மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மின் கோட்டத்துக்குட்பட்ட சிறுவாச்சூர் மற்றும் புதுக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று( ஜூன் 21) அவசரகால சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அயிலூர், கவுள்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அரியலூர்

அரியலூர் துணை மின்நிலையத்திலிருந்து கல்லங்குறிச்சி மற்றும் தேளூர் மின்பாதை வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் பாதையில் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 21) நடைபெற உள்ளன. இதனால், இவ்வழியாக மின்சாரம் பெறும் கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது.

அரியலூர் துணை மின்நிலையத்திலிருந்து அஸ்தினாபுரம் மற்றும் கொளப்பாடி மின்பாதை வழியாக மின்சாரம் செல்லும் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வழியாக மின்சாரம் பெறும் கிராமங்களில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, பி.ஆர்.நல்லூர் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இவ்வழியாக மின்சாரம் பெறும் கிராமங்களில் இன்று (ஜூன் 21) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் நகரம் மற்றும் திருப்பனந்தாள் துணை மின் நிலையங்களில் நாளை(ஜூன் 22) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, கணபதி நகர், ராஜப்பா நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ-ஆப்ரேட்டிவ் காலனி, மேலவலம்புரி தெரு, குருவிக்காரத் தெரு, எம்ஜிஆர்நகர், பம்பிங் ஸ்டேஷன் சாலை மற்றும் மகாராஜபுரம், குருகூர், அத்தியூர், காட்டூர், பந்தநல்லூர், கூத்தனூர், கெளுத்தியூர், கீழசூரியமூலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x