Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

செய்யாறில் மின்சார அலுவலகம் இடமாற்றம் :

திருவண்ணாமலை: செய்யாறில் இளநிலை மின் பொறியாளர் கிராமிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டம் செய்யாறு நகர உப கோட்டத்துக்கு உட்பட்ட இளநிலை மின் பொறியாளர் கிராமிய அலுவலகம், திருவத்திபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெரும்பள்ளம் துணை மின் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இளநிலை மின் பொறியாளர் கிராமிய அலுவலகம் இன்று (21-ம் தேதி) முதல் செயல்பட உள்ளது. எனவே, இந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x