Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

மில்கா சிங் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல் :

சென்னை

பிரபல முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தடகள சாதனையாளர் மில்கா சிங் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சிடையந்தேன். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4 முறை தங்கப் பதக்கம் வென்று, ‘பறக்கும் சீக்கியர்’ என போற்றப்பட்டவர். வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை கடந்து வெற்றி பெற நினைக்கும் இந்தியர்களுக்கு அவரது போராட்ட குணம் பெரிய ஊக்கமாக இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவரும், ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங்மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும் பலஇளம் இந்தியர்களை சாதிக்கத் தூண்டட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x