Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM
எம்ஜிஆர் இரட்டை வேடத்தில்நடித்த படங்கள் வெற்றிபெற்றதுபோல் இரட்டைத் தலைமையின்கீழ் அதிமுக வெற்றிநடை போடுகிறது என செல்லூர் கே.ராஜூ கூறினார்.
இதுகுறித்து மதுரையில் நேற்றுஅவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஆனால், தற்போது ‘நீட்’தேர்வுக்கு தயாராகும்படி சொல்கின்றனர். மக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டும்தான்.
அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று சாதித்தது என்ன? ‘கோ பேக் மோடி' என்று திமுகவினர் சொன்னாலும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார் மோடி. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்ட அதிமுக ஆட்சியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பெரிய வெற்றிபெற்றன. அதேபோல, 2 தலைவர்களின் ஆளுமையின்கீழ் அதிமுக வெற்றிநடை போடுகிறது.
அதிமுகவில் பிளவுபடுத்தும் வேலைகளை சிலர் செய்து வருகிறார்கள். அது நடக்காது. உள்ளாட்சி தேர்தல் வரைக்கும்தான் திமுக கூட்டணி நீடிக்கும். அதன் பிறகு மதிமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் பிரிந்து சென்றுவிடுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT