Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் மெயின்ரோடு மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மதனகோபால் (37). கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகுணா (33).
இவர் வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்தார். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை குழந்தை இல்லை. இதனால் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவ்விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த சுகுணா, விஷ மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். வில்லியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டாட்சியர் விசா ரணையும் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT