Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

மெகுல் சோக்சியை இந்தியா அழைத்துவர மத்திய அரசு தீவிர முயற்சி :

புதுடெல்லி

மெகுல் சோக்சியை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அதுதொடர்பாக டொமினிக்கன் அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெகுல் சோக்‌சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு, 2018ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். நீரவ் மோடி லண்டனுக்குச் சென்றார், மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்து, அங்கு குடியுரிமையும் பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம், ஆன்டிகுவா தீவிலிருந்து அவர் மாயமானார். இந்நிலையில் மே 25ம் தேதி டொமினிக்கன் தீவில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி அந்நாட்டு அரசு அவரைக் கைது செய்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணையை டொமினிக்கன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் 25ம் தேதி வரையில ஒத்துவைத்துள்ளது.

இந்நிலையில் மொகுல் சோக்சியை விரைவிலே இந்தியா கொண்டுவரதற்காக டொமினிக்கன் அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x