Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடை பெற்றது. அதை தூண்டி சதியில் ஈடுபட்டதாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஜாமியா மிலியா பல்கலை. மாணவர் ஆசிப் இக்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.அதன்பின் அவர்கள் விடுதலையாகினர்.
இதை எதிர்த்து டெல்லி போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்போதைய நிலையில் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT