Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு - மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. தேர்ச்சி மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக மாணவர்கள், பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மதிப்பெண் இல்லாத சான்றிதழ் என்பதால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில்உடனடியாக தலையிட்டு, 10-ம்வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் கிணறுகள்

ஓபிஎஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘‘ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்தில் 5,அரியலூரில் 10 கிணறுகளை அமைக்க எண்ணெய் எரிவாயு ஆணையம், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி வேண்டியுள்ளது. காவிரி டெல்டா மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண்அல்லாத பிற பணிகள் நடைபெறக்கூடாது என்பதில் விவசாயிகள், கட்சிகள் உறுதியாக உள்ளன. எனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஏல அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு முதல்வர்எடுத்துரைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x