Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM
திருமூர்த்தி அணை கோட்ட அலுவலகத்தின் பெயர் பலகையில் தவறான நீரியல் விவரங்களை அதிகாரிகள் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பிஏபி பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் ஜி.விவேகானந்தன் கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், "பிஏபி திட்டத்தில் ஆண்டுதோறும் பாசனத்துக்காக 3,000 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக, தவறான தகவல்பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஏபி திருமூர்த்தி கோட்ட அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் நேற்று நீரியல் விவரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுப்பு அணைகளில் ஒன்றான தூணக்கடவு அணைக்கு, அதன் வழக்கமான நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற 225 கன அடி நீரை குறிப்பிடவில்லை. இது போன்ற இருட்டடிப்பு நிலையை தவிர்த்து, உண்மை யான தகவலை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கோட்டப்பொறியாளர் கோபியிடம் கேட்டபோது, "இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT