Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM
திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பல்வேறு நிலை தொழிலாளர்களுக்கு, தமிழக அரசின் கரோனா நிவாரண உதவிகளை எம்எல்ஏ பாலாஜி நேற்று வழங்கினார்.
தமிழக அரசு, கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தது. இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரணநிதி உதவிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 25 தொழிலாளர்களுக்கு, தலா ரூ.4 ஆயிரம் பணத்துடன் அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் பி.கே.கவெனிதா, செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வர் சிவகாமி, மேலாளர் வெற்றிவேல், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT