Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

கும்மிடிப்பூண்டி அருகே - ரப்பர் மறுசூழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து :

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் ரப்பர் மறுசுழற்சி தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலை, பழைய டயர்களில் இருந்து ரப்பரை தனியாக பிரித்து,பொடியாக்கி மீண்டும் புதிய டயர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறது.

இந்த தொழிற்சாலை வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் குவிக்கப்பட்டிருந்த திறந்தவெளி பகுதி நேற்று திடீரென தீப்பற்றியது. அந்த தீ, கட்டுக்கடங்காமல் 40 அடி உயரத்துக்கு மேல் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, 2 தீயணைப்பு வாகனங்கள், 7 தண்ணீர் டிராக்டர்களை பயன்படுத்தி, சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, பாதிரிவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் பழைய பொருட்கள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களுக்கான பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே உள்ள பழையபொருட்கள் வைக்கும் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதைத் தொடர்ந்து ரயில்வே தீயணைப்புத் துறை, தாம்பரம் தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x