Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM
மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஏ.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சக்கரை(61) என்பவர் அடிக்கiடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக சாப்டூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்ஸோ சட்டத்தில் சக்கரையை போலீஸார் கைது செய்தனர்.
மேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர், உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த மேலூர் ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் தேவி மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், சிறுமியை திருமணம் செய்யத் தயாராக இருந்த சாதிக் பாட்சா(25), உடந்தையாக செயல்பட்டதாக சபரியா பேகம்(45), புரதோஸ் பேகம்(46), காஜா மைதீன்(55) ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT