Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்ய கூடாது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் தென்மண்டல அளவிலான பத்திரப் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வணிகவரி மற் றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்தில் அத்துறையின் செயலாளர் பா.ஜோதிநிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவனருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பத்திரப்பதிவு தொடர்பாக குறை களைத் தெரிவிக்க 3 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களுக்கு ஒரே நாளில் 377 புகார்கள் வந்தன. இதில் 84 புகார்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்வுமுறை இதுவரை இல் லாதது. பதிவுத்துறையில் தவறு நடக்காமல் பணியாற்ற அறிவுரையும், எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்த நாளிலேயே 90% பத்திரங்கள் திரும்ப வழங்கப்பட்டு விடுகின்றன. களப்பணி உள்ளிட்ட காரணங் களால் தாமதமாகும் 10 சதவீத பத்திரங்களையும் ஒரு வாரத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்யக்கூடாது என அர சாணை வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பதிவு செய்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரத்துடன் புகார் வழங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துறை தலைவர், அரசு செயலாளருடன் நானும் அடிக்கடி ஆய்வு நடத்த உள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT