Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
மதுரை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மாநகராட்சி ஆணையராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கா.ப.கார்த்திகேயன் நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விளக்குத்தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள், தகவல் மையப் பணிகள், பல்லடுக்கு வாகனக் காப்பகம், குன்னத்தூர் சத்திரம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
விளக்குத்தூணைச் சுற்றியுள்ள பகுதியை நவீன முறையில் அழகுபடுத்தியும், கருங்கற்கள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை ஆய்வு செய்து அப்பகுதியில் தினந்தோறும் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளுமாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகர் பொறியாளர் அரசு, கண்காணிப்புப் பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT