Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM

ஆம்பூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளில் - இன்று முதல் 4 நாட்களுக்கு மின் தடை :

ஆம்பூர்

பள்ளிகொண்டா மின் கோட்டத் துக்கு உட்பட்ட ஆம்பூர், அணைக் கட்டு, ஒடுக்கத்தூர் பகுதிகளில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என பள்ளிகொண்டா மின் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.விஜய குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளி கொண்டா மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூர், அணைக்கட்டு, சோமலாபுரம், பூஞ்சோலை, வடகாத்திப்பட்டி, ஒடுக்கத்தூர், ஆம்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்பராமரிப்புப்பணிகள் மேற் கொள்ள இருப்பதால் இன்று (19-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை மின் நிறுத் தம் செய்யப்படும்.

அதன்படி, இன்று (19-ம் தேதி) ஆம்பூர் எம்வி சாமி நகர், பெத்லகேம், ரெட்டித்தோப்பு, உமர்சாலை, எம்சி சாலை, பஜார் பகுதிகள், அணைக்கட்டு அடுத்த பெரிய ஊனை, மோட்டூர், ஊனை பள்ளத்தூர், பீமநாதபுரம் பகுதி, பூஞ்சோலை அடுத்த வரதலம்பட்டு, பீச்சநாத்தம், சென்றாயக் கொட்டாய் , சோமலாபுரம் அடுத்த ரெட்டிமாங்குப்பம், எம்வி குப்பம், சிஆர் குப்பம், மேல் முருங்கை, வடபுதுப்பட்டு, ராஜக்கல், அழிஞ்சிக்குப்பம் , வடகாத்திப்பட்டி அடுத்த அளங்காநெல்லூர், மேல் ஆலத்தூர், கூடநகரம், கொத்த குப்பம், ஒடுக்கத்தூர் அடுத்த ஏரியூர், முத்துகுமார மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

வரும் 21-ம் தேதி கே.எம்.சாமி நகர், பன்னீர்செல்வம் நகர், தார்வழி, அணைக்கட்டு, ஊனை வாணியம்பாடி, ரெட்டியூர், அப்புக் கல், கரடிகுடி, தாங்கல், கிருஷ்ணா நகர், வாத்திமனை, ஏ-கஸ்பா, மோட்டுக்கொல்லை, உள்ளி, தோட்டாளம், வளத்தூர், ராசம் பட்டி, கீழ்ப்பட்டி, சேர்ப்பாடி, மடியம் பட்டு, கத்தாரிகுப்பம், மேல் அரசம்பட்டு, உமையம்பட்டு, முல்வாடி, பள்ளிகொண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

வரும் 22-ம் தேதி ஆம்பூர் புறவழிச்சாலை, இந்திராநகர், சாமியார்மடம், சான்றோர்குப்பம், ஊனை வாணியம்பாடி, நாராயண புரம், கவுதமபுரம், ஏரிபுதூர், தாங்கல், டிசிகுப்பம், போடிபேட்டை, அகரம், முகமதுபுரம், எல்லப்பன்பட்டி, சிவராஜபுரம், மளிகைதோப்பு, மோட்டுக் கொல்லை, டவர்ரோடு, துத்திப் பட்டு, ஒடுக்கத்தூர், அண்ணாநகர், வெங்கனபாளையம், ஓட்டேரி பாளையம், நேம்மந்தபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

வரும் 23-ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை சின்னகொம்மேஸ்வரம், பச்சக் குப்பம், வடபுதுப்பட்டு, கெங்க நல்லூர், கன்னிகாபுரம், தார்வழி, இலவம்பாடி, எம்சிரோடு, வேப்பங் குப்பம், குருராஜபாளையம், மராட்டிபாளையம், அகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மின் நிறுத்தம் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x