Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

வெல்டிங் தொழிலாளி கொலை மதுரையில் மூன்று பேர் கைது :

மதுரை சின்ன அனுப்பானடி ஓம் முருகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (33) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். ஜூன் 14-ம் தேதி வெல்டிங் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், அவரது வீட்டுக்கு அருகே முட்புதருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவனியாபுரம் போலீஸார் விசாரித்ததில், வெல்டிங் பட்டறையில் அவருடன் பணிபுரிந்த மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த விஜய் (22) என்பவருக்கும், முத்துக்குமாருக்கும் முன் விரோதம் இருந்ததும், இதன் காரணமாக விஜய் தனது நண்பர்கள் விக்னேஸ்வரன் (22) அருண்குமார் (21) உட்பட 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை கொலை செய்திருப்பது தெரிந்தது. விஜய், விக்னேசுவரன், அருண்குமார் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x