Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் கிராமம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ரங்கசாமி(55). இவரது மனைவி பவானி(49). இவர்களின் மகன் வெங்கடேசன்(28), தனது மனைவியுடன் அதே ஊரில் வசித்து வருகிறார்.
வெளிநாட்டில் வேலை செய்துவந்த ரங்கசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து, அவரிடம் நெல் அறுவடை இயந்திரம் வாங்கித் தரும்படி வெங்கடேசன் வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ரங்கசாமி தனது மகனை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதைத் தடுக்கச் சென்ற ரங்கசாமியின் மனைவி பவானி மீது கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த பவானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரங்கசாமியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT