Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக், திரிணமூல் காங்கிரஸ் ஒப்பந்தம் 2026 வரை புதுப்பிப்பு

கொல்கத்தா

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை வரும் 2026-ம்ஆண்டு வரை புதுப்பித்துக் கொண்டுள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி.

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றும் தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சியைப் பிடித்தது.

இதனிடையே, தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியிலிருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். ஆனாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசி வருகிறார். வரும் 2024-ல் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட அவர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஐ-பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x