Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த - குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக் கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், அந்த குழந்தை களுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு வழங்கப்படும். அக்குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். கரோனா தொற்றால் பெற்றோரில் ஒரு வரை இழந்த குழந்தையுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்படும்.

பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலர் ஆதரவில் வள ரும் குழந்தைகளின் பராமரிப்பு செல வாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங் கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரை கல்விக் கட் டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல் படுத்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் வழிகாட்டி நெறி முறைகளுடன் அரசாணை வெளியிடப் பட்டது. அதன்படி, கரோனாவால் பெற் றோரை இழந்த குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டா லின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 5 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சத்தை தமிழ் நாடு மின்விசை நிதி மறறும் அடிப் படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்ததற்கான சான்றிதழ்களை அக்குழந்தைகளின் பாது காவலர்களிடம் முதல்வர் வழங்கினார்.

மேலும், கரோனா தொற்றால் பெற் றோரில் ஒருவரை இழந்த குழந்தை களுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகை யாக ரூ.3 லட்சம் வழங்கும் வகையில், 5 குழந்தைகளின் தாய், தந்தைக்கு காசோலைகளை முதல்வர் வழங் கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x