Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
டிஎன்பிஎஸ்சி செயலாளராக பணியாற்றி வந்த கே.நந்தகுமார் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த இரா.சுதன் ஆகியோர் வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி செயலாளராக பி.உமா மகேஸ் வரியும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக கிரண் குராலாவும் நேற்று நியமிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி தலை வராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பாலசந்திரன் பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎஸ்சி-யில் மொத்தம் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகிய இருவர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். எஞ்சிய 12 உறுப்பினர் இடங்கள் காலியாகவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT