Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் - விலையை குறைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தொழில் மற்றும்தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார்.

கலை பண்பாட்டுத் துறையின்கீழ் வரும் இயல், இசை நாடக மன்றம், அரசு கவின் கலைக் கல்லூரிகள், அரசு இசைக்கல்லூரி உள்ளிட்ட அமைப்புகளின் பணிகள்குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறையின் செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடர்பாக அமைச்சர்தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொல்லியல் துறை ஆய்வுப்பணிகள், அரசு அருங்காட்சியகங் கள், உறுப்பினர் சேர்க்கையில் உள்ள பிரச்சினைகள், 60 வயது நிறைவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வரும்காலங்களில் முதல்வர் அறிவுரைக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கீழடியில் தற்போது 7-ம் கட்டஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் மிக முக்கியமான பொருட்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுதவிர திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு மூலம் தாமிரபரணி நாகரீகத்தை காட்சிப்படுத்தும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள சிமென்ட்உற்பத்தியாளர்களிடம் ஏற்கெனவேபேசப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளோம். சிமென்ட் விலையை குறைக்க வேண்டும் என்று சிமென்ட் உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் அரசின் நிலைப்பாட்டை ஏற்றுள்ளனர். அதீத விலையேற்றத்தை அனுமதிக்க முடியாது. விலைஏற்றத்தை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது.

அரசின் நிலைப்பாட்டை ஏற்றுஉற்பத்தியாளர்கள் விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இந்த விலையேற்றத்தை குறைக்காவிட்டால் தமிழக அரசுசட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.உற்பத்தியாளர்களிடம் கடந்தாண்டுமார்ச் மாத விலை உள்ளிட்டவிவரங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். உற்பத்தியாளர்கள் நியாயமான முறையில் கட்டுமான பொருட்கள் விலையை நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x