Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
சென்னை வண்டலூர் பூங்கா வளாகத்தில் 13 சிங்கங்கள், மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் 2 சிங்கங்கள் என 15 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் பூங்கா வளாகத்தில் இருந்த 5 சிங்கங்கள், உணவு முறையாக உண்ணாமல், சோர்வுடன், தொடர் இருமல் அறிகுறியுடன் காணப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவற்றில் 11 சிங்கங்களுக்கு கரோனா பரி சோதனை செய்ததில், 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மற்றொரு பரிசோதனையில் மேலும் ஒரு சிங்கத்துக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே கரோனா தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட 9 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பூங்கா மருத்துவர் கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இவற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 12 வயதுடைய பத்மநாதன் என்ற ஆண் சிங்கம் நேற்று காலை உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து, பூங்காவில் சிகிச்சை பெற்றுவரும் 8 சிங்கங்களை பூங்கா மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT