Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM
கேளம்பாக்கத்தை அடுத்த ஜோதி நகர் பகுதியில் திமுக சார்பில் ரூ.3.25 லட்சம் மதிப்பிலான கரோனா நலத்திட்ட உதவிகளை, ஏழை எளிய மக்களுக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகரில் திமுக சார்பில் கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிளை செயலாளர் அன்பு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ என ரூ.3.25 லட்சம் மதிப்பிலான அரிசியை அமைச்சர் வழங்கினார்.
மேலும், காய்கறிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி.செல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எல்லப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT