Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

உடுமலை, தாராபுரம் டிஎஸ்பி-க்கள் பணியிடமாற்றம் :

திருப்பூர் மாவட்டம் உடுமலை,தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இடம் மாற்றப்பட்டு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்

நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைகாவல் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்ட இவர், அதன் பின் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தற்போது, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி-ஆக பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேன் மொழி வேல் என்பவர் உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாராபுரம் டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த ஜெயராம், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி-ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த காங்கயம் டிஎஸ்பி தனராசு, தாராபுரம் டிஎஸ்பி-ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x