Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅருகே உள்ள பட்டாபிராமை சேர்ந்தவர் பிரசாந்த்(25). இவர்,நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள பாரதமாதா தெருவில்சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், பிரசாந்தை செங்கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் உயிரிழந்தார்.
பட்டாபிராம் போலீஸார் பிரசாந்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிந்த போலீஸார், பிரசாந்தை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரசாந்த் கொலை தொடர்பாக, பட்டாபிராம் மணிகண்டன், முகேஷ், சாய் ஆதித்யா, வினோத், ஜூலி ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்த போலீஸார் விசாரணையில் பிரசாந்தும் அவரதுநண்பர்களும் நேற்று முன்தினம் மாலை நெமிலிச்சேரி ஏரிக்கரையில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு வந்த மணிகண்டன், முகேஷு ஆகியோர் பிரசாந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் மணிகண்டன் தரப்பினர் பிரசாந்தை தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT