Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(62). இவரது மனைவி அறிவழகி(48). தனியாக வசித்து வந்த தம்பதிகள் இருவரும், கடந்த 8-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டிலிருந்த 20 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், பெரியசாமி வீட்டுக்கு மின்சார வேலைகளுக்காக அடிக்கடி வந்து சென்ற மேல உசேன் நகரம் கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சந்தோஷ் என்பவர், தனது நண்பர்களான, மேல்உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் மணிகண்டன்(22), செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த மாரி மகன் சத்யா(20) மற்றும் யுவராஜ், மகேஷ், ராம் ஆகியோருடன் சேர்ந்து தம்பதியரை கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சத்யா, மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்தோஷ், மகேஷ், யுவராஜ், ராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT