Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை :

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் புளியங்குளம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த பழனிக்குமார் பணிக் காலத்தில் மரணமடைந்தார். அவரது வாரிசுதாரரான ஆனந்திக்கு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊர்நல அலுவலர் நிலை-2 பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலமருதப்பபுரம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த ராஜேந்திரன் பணிக்காலத்தில் இறந்ததால், அவரது வாரிசுதாரரான மாலதிக்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

சங்குப்பட்டி ஊராட்சி செயலா ளராக பணிபுரிந்த வேலுச்சாமி பணிக்காலத்தில் இறந்ததால், அவரது வாரிசுதாரரான மதனுக்கு மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றித்தில் காசாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மருக்காலன்குளம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த முருகன் பணிக்காலத்தில் இறந்ததால், அவரது வாரிசுதாரரான சங்கருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த பணி நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x