Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக வரும் 20-ம் தேதிசென்னையில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா செல்கிறார்.
ரஜினிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி சென்னை திரும்பினார். அதன்பிறகுநடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதை வழக்கமாக தொடர்கிறார்.
ஆனால், கரோனா அச்சுறுத்தல்காரணமாக கடந்த ஓராண்டுக்கும்மேலாக மருத்துவ பரிசோதனைக்கு செல்லாமல் இருந்து வந்தார். ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினி, அண்மையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய அரசின் அனுமதியையும் பெற்றிருக்கிறார். வரும் 20-ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
சென்னையில் இருந்து நேராக வாஷிங்டன் நகருக்கு செல்லும்ரஜினி, அங்கிருந்து மின்னியாபோலிஸ் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவ பரிசோதனை முடிந்துசில வாரங்கள் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டு சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.
ரஜினியுடன் அவரது குடும்பஉறுப்பினர்கள் சிலரும் செல்கின்றனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யாதனுஷ், தற்போது அமெரிக்காவில்தான் உள்ளார். சென்னை திரும்பிய பிறகு, ‘அண்ணாத்த' படத்தின்டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT