Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் அருகே இருசக்கர வாக னங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாத்தா, பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
வேடசந்தூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி (50). இவர் தனது பேரன்கள் சபரி (12), தர்சன்(6) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
ராமபுரம் அருகே சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தண்ணீர் பந்தம்பட்டியைச் சேர்ந்த காளி முத்து (30) என்பவர் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதினார். இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். மணி, சபரி, தர்சன், காளிமுத்து ஆகிய 4 பேரையும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.
முதலுதவிக்குப் பிறகு தீவிரச் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதில் மணி, தர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். சிறுவன் சபரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT