Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள வெள்ளிமலை முதல் பொம்மராஜபுரம் வரையிலான சாலையின் அகலத்தை அதிகரிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேனியைச் சேர்ந்த காசிராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேகமலை ஊராட்சிக்குட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில் 170 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்துக்குச் செல்ல வெள்ளிமலையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1 மீட்டர் அகல சாலையே உள்ளது. இந்த சாலையின் அகலத்தை 3 மீட்டராக உயர்த்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், அப்பகுதியில் புலிகள் சரணாலயம் உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சரியான காரணங்களுடன் அரசிடம் முறையிடலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT