Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளது:
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது. ஆனாலும், சாலைகள், ஆற்றங்கரைகள், நீர்நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமானப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடந்து புகார்கள் வருகின்றன.
தற்போதுள்ள கரோனா தொற்று சூழலில், மருத்துவக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு கேடுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் ஆகியவை, மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, அந்தந்தப் பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT