Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலை தணிந்து வருவதன் அறிகுறியாக, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 70,421 ஆக குறைந்து உள்ளது.
இந்தியாவில் கரோனா தொற் றின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை அடைந்தது. அப்போது சில நாட்கள் தினசரி கரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் அதிக மாக இருந்தது. ஆனால், அதன் பிறகு தொற்று பாதிப்பு படிப்படி யாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421 ஆக பதிவானது. இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பதி வான மிகக் குறைந்த எண்ணிக்கை யாகும்.
கடந்த 7 நாட்களாகவே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு கீழாகவே பதி வாகி வருகிறது. நாட்டில் தற்போது ஒட்டுமொத்தமாக பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10,410 ஆக உள்ளது
எனினும், உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து 3 நாட் களாக 3 ஆயிரத்துக்கு மேலாக உள்ளது. கடந்த 24 மணி நேரத் தில் மட்டும் 3,921 பேர் கரோனா வால் இறந்துள்ளனர். இதுவரை நாட்டில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 305 பேர் கரோனாவால் இறந் துள்ளனர். அதேநேரத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுவோரின் எண் ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது 9 லட்சத்து 73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
95.43 சதவீதம் பேர்
மேலும், குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள் ளது. பாதிக்கப்பட்டவர்களில் 95.43 சதவீதம் பேர் குணமடைந்துள்ள னர். நேற்று மட்டும் ஒரு லட்சத்து 19,501 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2 கோடியே 81 லட்சத்து 62,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி கரோனா பாதிப்பு 4.72 சதவீதமாகவே உள்ளது.
25.48 கோடி பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இதுவரை 25.48 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 லட்சத்து 99,771 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இத்தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச் சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT