Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கு சென்று பணிகளை தொடங்கினர். பிளஸ் 1 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடை பெற்றது.
மேலும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியும் நடைபெற்றது. இந்தப் பணியை கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதேபோல், மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் உட்பட பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT