Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

மகேஷ்பாபுவுக்கு ஒரு கதை :

சிறந்த திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், ‘பாகுபலி’, ‘மெர்சல்’, ‘தலைவி’ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பின்னர், தனது மகனான இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் திரைக்கதை, எழுத்துப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து, தற்போது அடுத்த படத்துக்கான கதை உருவாக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார். இப்படத்தையும் அவரது மகன் ராஜமவுலிதான் இயக்க உள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபு இதில் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x