Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் கரோனா பாதிப்புதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள்7,839, பெண்கள் 6,177 என மொத்தம் 14,016 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,895, ஈரோட்டில் 1,323, சென்னையில் 935 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 53,721 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 5 லட்சத்து 8,043 பேர் உட்பட தமிழகம்முழுவதும் 21 லட்சத்து 74,247 பேர்குணமடைந்துள்ளனர். நேற்று 25,895 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 17,617, திருப்பூரில் 15,825, ஈரோட்டில் 11,371, சென்னையில் 9,140 பேர் உட்பட தமிழகம் முழுவதும்1 லட்சத்து 49,927 பேர் சிகிச்சை யில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29,547 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 25,009, கோவையில் 2 லட்சத்து 3,540, செங்கல்பட்டில் 1 லட்சத்து 51,228, திருவள்ளூரில் 1 லட்சத்து 7,734 என்றஎண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT