Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி :

கோவை

கோவையில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும்அவர்களது பெற்றோர், பாதுகாவலர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. 77 மையங்களில் காலை10 மணி முதல் தடுப்பூசி போடதிட்டமிட்டு இருந்த நிலையில், தடுப்பூசி வருகை தாமதமானதால் மதியம் ஒரு மணிக்கு மாற்றப் பட்டது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “மாற்றுத்திறனாளிகள் நலனைக் கருத்தில்கொண்டு மாநகர பகுதிகளில் 31 மையங்கள், புறநகர் பகுதிகளில் 46 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர், பாதுகாவலர்கள் என மொத்தம் 3,649 பேர் ஒரே நாளில்பயன்பெற்றுள்ளனர். ஊரக பகுதிகளில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 14) நடைபெறும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x