Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டும் அரசு நிதியுதவி பெறும் தனி யார் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதி யர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம்,ஓய்வூதியத்தை தராததால் கரோனா காலத்தில் தவித்து வரு வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 32 அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கு கடந்த 2 வருடங்களாக ஊதியம் மற்றும் ஒய்வூதியம் முறை யாக வழங்கப்படாமல் இருந்தது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றவுடன் 6மாத ஊதியத்தை தர ஆணை யிட்டார். மாத ஊதியத்தை, ஓய்வூதியத்தை தடையின்றி தருவதாக உறுதி தந்தார். ஆனால் ஆளுநர் உத்தரவிட்டும் ஊதியம், ஓய்வூதியம் வராமல் கரோனா காலத்தில் தவிப்பதாக பல ஆசிரியர்களும் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக பாத்திமா மேல்நிலைப்பள்ளி ஊழியர் சங்க செயலர் மார்ட்டின் கென்னடிகூறுகையில், “ஆளுநர் உத்த ரவுப்படி கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரையிலான ஊதியம் தரப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாத ஊதியம் (டிசம்பர் 2019 - ஆகஸ்ட் 2020) கல்வித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துரை கிடைத்த பிறகு தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் முதல் மாத ஊதியம் மற்றும் ஒய்வூதியம் வழங்க கல்வித்துறையின் சார்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக் கப்பட்டது.
ஆனால் நிதித்துறை ஊதி யம் வழங்க அனுமதி மறுத்து சம்பள கோப்பினை மீண்டும் கல்வித்துறைக்கே திருப்பி அனுப்பிவிட்டது. மாத ஊதியமும் தரவில்லை. 9 மாத நிலுவை ஊதியமும் முழுமையாக தர வில்லை. இதனால் கரோனா காலத் திலும் ஊதியமின்றி தவிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT