Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

கோவில்பட்டி அருகே - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் :

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாகுபாடின்றி முறையாக பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு த்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாரீஸ்வரன் தலைமையில் கிராமமக்கள் மூப்பன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்சல், ஊராட்சி மன்றத் தலைவர் லிங்கேஸ்வரி ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அத்தியாவசியத் தேவைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x