Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் இதுவரை 21.48 லட்சம் பேர் குணமடைந்தனர் - தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்தது : முதியவர்கள் உட்பட 374 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவரை 21 லட்சத்து 48,352 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்8,342, பெண்கள் 6,766 என மொத்தம் 15,108 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,982,ஈரோட்டில் 1,353, சென்னையில் 989 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை23 லட்சத்து 39,705 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 5 லட்சத்து 6,454 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 21 லட்சத்து 48,352 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று27,463 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவையில் 18,274, திருப்பூரில் 16,567, ஈரோட்டில் 11,892, சென்னையில் 9,838 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 62,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட374 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1 கோடி தடுப்பூசிகள்

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் அச்சம் இருந்தது. கரோனா 2-வது அலை தீவிரமானதால் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். நேற்றைய நிலவரப்படி 1 கோடியே 1 லட்சத்து 3,594 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 3 லட்சத்து 26,573 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x