Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

108 அவசர ஊா்தி சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தல் :

நாமக்கல்: நாமக்கல்லில் 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்க இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராஜேந்திரன் தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 தொழிலாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதற்கு இந்நிறுவனத்தின் நிா்வாக அதிகாரிகள் முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என்பது தான் காரணமாகும். 108 அவசர ஊா்தியை முறையாக தூய்மைப்படுத்தாததால் தொழிலாளா்களும், பொதுமக்களும் நோய்தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. இலவச மருத்துவ சேவை ஏழை, எளிய மக்களுக்குத் தங்குதடையின்றி விரைவாக கிடைக்கவும், தொழிலாளா்களின் நலனை உறுதி செய்யவும் 108 அவசர ஊா்தி சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x