Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

சேலம்: சேலத்தில் இன்று (13-ம் தேதி) காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது.இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொறியாளர் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, பெரியார் தெரு, விநாயகா கார்டன், குட்ட தெரு, சட்டக்கல்லூரி சாலை, குள்ளர் தெரு, வைத்தி தெரு, கனகராஜா கணபதி தெரு, இரண்டாவது அக்ரஹாரம், அங்காளம்மன் கோயில் தெரு, பெரிய கிணறு தெரு, எஸ்எம்சி லைன், கந்தப்பா காலனி, பென்சன் லைன், பெரியார் தெரு பகுதிகளிலும், நண்பகல் 12 முதல் மதியம் 2 மணி வரை பெருமாள் மலை அடிவாரம், அழகு நகர், ஆண்டிப்பட்டி காலனி, அல்ராஜ் தெரு, வன்னியர் நகர், சக்தி நகர் அனெக்ஸ்,காந்தி ரோடு, செவ்வாய்பேட்டை வைத்தி தெரு, அண்ணா நகர், முகமது புறா, ஹரிசெல்வன் தெரு, வித்யா நகர் அண்ணா மருத்துவமனை, சாமுண்டி தெரு, காளியம்மன் கோயில் தெரு, ராஜ மாரியம்மன் கோயில் தெரு, சின்னப்பசெட்டி காடு உள்ளிட்ட பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும். மேலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை காளியம்மன் கோயில் தெரு, சோளம்பள்ளம், திருவாக்கவுண்டனூர் கண்ணகி தெரு, லாட குப்பன் தெரு, மெய்யனூர், பிள்ளையார் நகர், நாராயணபிள்ளை தெரு, கோட்டை ஜலால்கான் தெரு, தில்லை நகர், சத்திய மூர்த்தி தெரு, அண்ணாமலை தெரு, குமரன் தெரு, மீனாட்சிபுரம், நடுத்தெரு, மேற்கு முனியப்பன் கோயில் தெரு, தலைமலை நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x