Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

தலைவர்கள் மீது : வலைதளத்தில் அவதூறு : திமுக வழக்கறிஞர் புகார் :

மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கனகவேல்பாண்டியன் மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவிடம் புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறி யிருப்பதாவது:

திமுகவின் மீதும், மறைந்த தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, முன்னாள் சட்டப் பேரவை தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களை தவறாக விமர்சித்து, கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

தலைவர்கள் மீது அவதூறு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வரும் கிஷோர் கே சுவாமியின் சமூக வலை தளத்தைக் கண்காணித்து அவர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x