Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணித்து 855 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு :

ஈரோடு: கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதுவிலக்கு காவல் துறையினர் தசையன்காடு, எம்மாம்பூண்டி, சோளக்காடு, மீன்குட்டை, எம்.ஜி.ஆர் நகர், ராயர்பாளையம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் முட்புதர்களுக்கு அடியில் 10 இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 855 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை காவல் துறையினர் கீழே கொட்டி அழித்தனர். மேலும், தலைமறைவான நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x