Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

புதூர் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு - ரூ.2.10 லட்சம் மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல் :

விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு, அங்கு வந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் விதமாக வட அமெரிக்கா கம்மவார் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.10 லட்சம் மதிப்பிலான கரோனா பாதுகாப்பு உபகரணங்களை எம்.எல்.ஏ., புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அனிதாவிடம் ஒப் படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x