Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

பறிமுதலான மதுபாட்டிலை விற்ற புகாரில் மேலும் ஒரு சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலைய போலீஸார், கடந்த மே 8-ம் தேதி வாகன சோதனையின்போது, 434 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அப்போது, மதுபாட்டில்கள் வைத்திருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பிய போலீஸார், மதுபாட்டில்களை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து, மற்றொருவரிடம் விற்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன், ஏட்டு ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் அண்மையில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் எஸ்.பிக்கு அறிக்கை அனுப்பாததால், திருச்சிற்றம்பலம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெத்தபெருமாளை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x