Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

தீ விபத்தில் கார் சேதம் :

ஆம்பூரில் உணவகத்தின் முன்பு நிறுத்திய கார் தீயில் எரிந்து சேதமடைந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சத்திய பிரியன் (28). இவர், ஆம்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 7 மணியளவில் ஆம்பூர் வந்தடைந்ததும் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் டிபன் வாங்கச் சென்றார். காரை நிறுத்திவிட்டு சென்றபோது திடீரென காரின் இன்ஜின் பகுதியில் இருந்து தீ எரியத் தொடங்கியது.

சில விநாடிகளில் தீ மளமளவென பரவி முன்பக்கம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x