Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம் :

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணிகளை துரிதப்படுத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் மு.பழனிசாமி, மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘நடப்பு கல்வியாண்டில் முதல் பருவத்துக்கான பாடநூல், நோட்டுப் புத்தகம் உட்பட அரசின் இலவச நலத்திட்ட பொருட்கள் மாவட்ட மையங்களில்இருந்து பள்ளிகளுக்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை இயக்குநரகத்துக்கு ஜூலை 15-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x