Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

சிவில் சர்வீசஸ் நேர்காணல் ஆக. 2-ம் தேதி தொடக்கம் :

யுபிஎஸ்சி சார்பில் 2020-ம் ஆண்டுக்கான 890 சிவில் சர்வீசஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரிமாதம் நடத்தப்பட்டது. அதில் இருந்து நேர்காணலுக்கு 2,046 பேர் தகுதிபெற்றனர்.

நேர்முகத் தேர்வு ஏப்ரல் 26-ம்தேதி தொடங்க இருந்த நிலையில்,கரோனா 2-வது அலை பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேர்காணல் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 22-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x